இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

1 Min Read

இரா­மேஸ்­வ­ரம், ஆக.13- இலங்கை கடற்­ப­டை­யின் தாக்­கு­தலை தடுத்து நிறுத்­தா­மல் வேடிக்கை பார்க்­கும் ஒன்­றிய அரசை கண்­டித்து ராமேஸ்­வ­ரத்­தில் மீன­வர்­கள் வேலை­ நி­றுத்த போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீது இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரின் தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர் கதை­யாகி வரு­கி­றது. கச்­சத்­தீவு அருகே மீன்­பி­டிக்­கும் தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீது கற்­களை வீசி, இலங்கை கடற்­ப­டை­யி­னர் விரட்­டி­ய­டித்­த­னர். பாம்­ப­னில் இருந்து நாட்­டுப்­ப­ட­கில் மீன்­பி­டிக்க சென்ற 35 மீன­வர்­களை இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில், இலங்கை கடற்­ப­டை­யின் தாக்­கு­தலை தடுத்து நிறுத்­தா­மல் வேடிக்கை பார்க்­கும் ஒன்­றிய அரசை கண்­டித்து ராமேஸ்­வ­ரத்­தில் மீன­வர்­கள் 11.8.2024 முதல் கால­வ­ரை­யற்ற வேலை­நி­றுத்த போராட்­டத்தை தொடங்­கி­யுள்­ள­னர்.

இத­னால் பாம்­பன் துறை­மு­கத்­தில் 500க்கும் மேற்­பட்ட நாட்­டுப்­ப­ட­கு­கள் துறை­மு­கத்­தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மீன­வர்­கள் விவ­கா­ரத்­தில் இலங்கை அர­சுக்கு ஒன்­றிய அரசு அழுத்­தம் தர­வேண்­டும் என்­றும் மீன­வர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *