செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இதய மருத்துவ முகாம்!

1 Min Read

செய்யார், ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் 11.8.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இருதய மருத்துவ முகாம் சிறப் பாக நடைபெற்றது.

காலை 9 மணிக்குத் துவங்கிய மருத்துவ முகாம் நண்பகல் 1:30 மணி வரை நடைபெற்றது. முகாமில் 120 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனை இலவசமாக எடுக்கப்பட்டது. இருதய மருத்துவ நிபுணர்கள் நெ.பரத்குரு, டி.தியானேஸ்வர், நெ.விஜயலட்சுமி, அ.ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவ சிகிச்சையை வழங்கினர். வேல்.சோம சுந்தரம் நூற்றாண்டு விழா குழு மற்றும் சென்னை பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து இந்த இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.

அனைத்து ஏற்பாடுகளையும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோம.நெடுமாறன், பிரசாந்த் மருத்துவமனையின் மேலாளர் தேவசகாயம், தினேஷ் மற்றும் செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் ஆகியோர் செய்திருந்தனர். பிற்பகல் மருத்துவ குழுவினர்களுக்கு அசைவ உணவு வழங்கி சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *