வங்கதேச வன்முறை போலி காட்சிப் பதிவை பரப்பி உத்தரப் பிரதேச இஸ்லாமியர்களைத் தாக்கிய ஹிந்துத்துவ அமைப்பினர்

1 Min Read

லக்னோ, ஆக.12 வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றார்கள் என்ற போலி காட்சிப் பதிவைப் பரப்பி உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து அமைப்பினர் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்க தேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த செய்தி பரவியதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹிந்து ரக்சா தளம் என்ற ஹிந்துத்துவா அமைப்பினர் அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

‘‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் இங்கு வாழக்கூடாது. வங்கதேசத்திற்கே செல்லுங்கள்” என ஹிந்து ரக்சா தளம் அமைப் பின் குண்டர்கள் பெண்கள், சிறுமிகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி குடிசைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *