அம்பாலா, ஆக. 12- வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 28 போ் உயிரிழந்தனா்.
வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பெய்த பலத்த மழையை தொடா்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், வீடு இடிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.இதில் ராஜஸ்தான் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள கரவுலி மாவட்டத்தில் 38 செ.மீ. அளவுக்கு நேற்று (11.8.2024) மிக பலத்த மழை பெய்த நிலையில், மழையுடன் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் 16 போ் உயிரிழந்தனா்.
டில்லியின் மத்திய, தெற்கு, தென்மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலவுன் பகுதியில் பலத்த மழையை தொடா்ந்து வீடு இடிந்து விழுந்து ஒரு பெண், அவரின் 7 வயது மகன் உயிரிழந்தனா்.
பஞ்சாப் மற்றும் அரியானாவின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அரியானாவின் யமுனைநகா் மாவட்டத்தில் சோம் ஆற்றின் கரை உடைந்து கனுவாலா, பாம்னோலி, மாலிக்பூா் பாங்கா் உள்ளிட்ட சிற்றூா்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா். அங்குள்ள பல இடங்களில் விளைநிலங்களும் நீரில் மூழ்கின.