தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு 62 வயதாக உயர்வா? வதந்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு!

viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 12- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள் ளதாகவும் சமூக வலை தளங்களில் வெளியான தகவலை வதந்தி என தமிழ்நாடு அரசு மறுத் துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, 2021ஆம் ஆண்டு நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

அப்போதே, இளை ஞர்கள் அரசுப் பணியில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக, பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலி்ல் திமுக வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் புதிய அரசு பொறுப்பேற்றறது.

ஆனால், ஒய்வு வயது குறைக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண் டுகளாக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆகவே உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60 லிருந்து 62 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

மேலும், இது தொடர் பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைச்செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளதாகவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘இவ்வாறு வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே. அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப் படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *