மத்தூர், ஆக.12- மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11.8.2024) சிறப்பாக நடைபெற்றது. இதில் நீட் இருசக்கர வாகன பரப்புரையில் சென்னையில் இருந்து சேலம் வரை இருசக்கர வாகனத்தில் சென்ற ச.இ.அகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில பகுத்தறி வாளர் துணை தலைவர் அண்ணா. சரவணன் உரையாற்றினார். வி.திருமாறன், மற்றும் வீரமணி முன்னிலை வகித்தனர்.
பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுதல் பற்றி கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலை வர் கி.முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஒன்றிய கூட்டத்தில் மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது.முடிவில் ஆசிரியை மு.இந்திரா காந்தி நன்றி கூறினார்.
மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல்

Leave a Comment