மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல்

1 Min Read

மத்தூர், ஆக.12- மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11.8.2024) சிறப்பாக நடைபெற்றது. இதில் நீட் இருசக்கர வாகன பரப்புரையில் சென்னையில் இருந்து சேலம் வரை இருசக்கர வாகனத்தில் சென்ற ச.இ.அகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில பகுத்தறி வாளர் துணை தலைவர் அண்ணா. சரவணன் உரையாற்றினார். வி.திருமாறன், மற்றும் வீரமணி முன்னிலை வகித்தனர்.
பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுதல் பற்றி கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலை வர் கி.முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஒன்றிய கூட்டத்தில் மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது.முடிவில் ஆசிரியை மு.இந்திரா காந்தி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *