பனஸ்கந்தா, ஆக.11 குஜராத் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரியை கடந்த எட்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் சிகாகோவில் வசித்துக் கொண்டே தனது ஊதியத்தை பெற்று வந் துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் பல தலைமையாசிரியர்கள் அக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியில் அமர்த்தப்பட்டு, தங்களது பதவிக்காலம் முடிந்த தும் மாற்றப்பட்டுள்ளனர். இருப் பினும், பள்ளிக்கு வராமலும், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமலும் ஊதியம் பெற்று வந்த ஆசிரியை குறித்து யாரும் புகார் செய்யவில்லை. அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சிகாகோவில் வசித்து வந்தார்.
பாவனா பென் படேல் தினசரி பணிக்கு வந்ததாக பதிவேட்டில் கையொப்பமிடப்பட்டு அவருக்கு 67,000 ஊதியம் உள்ளிட்ட இதர படிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை கொடுத்து வந்துள்ளது.
பாவனா பென் படேலின் வங்கிக் கணக்கில் எட்டு ஆண்டுகளாக ஊதியம் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் யாருமே புகார் அளிக்கவில்லை.
சமீபத்தில் அப்பள்ளிக்கு பொறுப்பேற்ற புதிய தலைமை ஆசிரியை இந்த மோசடியை வெளிக் கொண்டு வந்தார். அவர் துணிச்சலாக உள்ளூர் யு டியூப் சேனல் ஒன்றில் பேட்டி யளித்தார். அதாவது ஜனவரி மாதமே இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்தார். ஆனால் அந்தப்புகார் இன்றளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை
அவர் யுடியூப் சேனல் ஒன்றுக்கு கூறும் போது, ஒன்று அவரை பணி நீக்கம் செய்யுங்கள் அல்லது அவரை இங்கு அழைத்து பணி செய்ய வையுங்கள். இரண்டுமே செய்யாமல் 8 ஆண்டுகளாக அவருக்கு ஊதியம் எப்படி கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
வைப்ஸ் ஆஃப் இந்தியா என்ற சேனலிலும் அவர் பேட்டி அளித்து, குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறினார்.
இந்த நிலையில் தொடர்புடைய ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளதாக குஜராத் பள்ளிக்கல்வித்துறை கூறி யுள்ளது. உண்மை என்னவென்றால் அவரது குஜராத் முகவரியில் அவரது குடும்பத்தார் ஒருவர் கூட இல்லை அனைவருமே என்.ஆர்.அய் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிரந்தரமாக தங்கிவிட்டனர்.
தனியார் ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில் குஜராத் முழுவதும் பள்ளிக்கே வராமல் ஊதியம் வாங்கும் நூற்றுக்கணக்கானோரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சிலர் இறந்துவிட்னர். சிலர் வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் சொந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு ஊதியம் போய்க் கொண்டே இருக்கிறது.