அண்ணா பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு

1 Min Read

சென்னை, ஆக. 11 அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நிறைவடைந்ததால், பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த 10.8.2024 அன்று நிறைவடைந்தது. பொதுவாக, துணைவேந்தர் பதவிக் காலம் நிறைவு பெற்றதும், அந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக குழு அமைக்கப்படும். அந்த வகையில் பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் குழுவில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக் கால மும் நிறைவு பெற்றுள்ளதால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *