தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் தனிநபர் மசோதாக்கள் தாக்கல்

0 Min Read

புதுடில்லி, ஆக.10– நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (9.8.2024) தமிழ்நாடு எம்.பி.க்கள் சிலர் தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்தனர். தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் 2 மசோதாக்களை அறிமுகம் செய்தார். திடக்கழிவு மேலாண்மை மசோதா-2024 மற்றும் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி உதவி கோரும் மசோதாக்களை அவர் அறிமுகம் செய்தார்.

வேலூர் தொகுதி எம்.பி. கதிர்ஆனந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்திருத்த மசோதா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களை பராமரிக்க சிறப்பு நிதி உதவி கோரும் மசோதா ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *