இலங்கை அதிபர் தேர்தல் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு

1 Min Read

கொழும்பு, ஆக.10- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சி களின் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற உள்ளது.
இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜனதா வெமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

அவர்களை தொடர்ந்து, மேனாள் அதிபர் மற்றும் பிரதமரான மகிந்த ராஜபக் சேவின் இளைய மகன் நமல் ராஜபக்சேவும் (வயது 38) அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக 7.8.2024 அன்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை மக்களின் முன் னணி கட்சி சார்பில் நமல் ராஜபக்சே தேர்தலில் களம் இறங்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகரா காரியவாசம் அதிகாரப்பூர் வமாக அறிவித்தார்.

நமல் ராஜபக்சேவின் வரு கையைதொடர்ந்து, இலங்கை அதிபர் தேர்தல் 4 முனை போட்டி யாக மாறியுள்ளது.
தமிழ் கட்சிகளின்

பொது வேட்பாளர்

இந்த நிலையில் இலங்கை தமிழ் கட்சிகளின் பொது வேட் பாளராக மேனாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 8.8.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இதனை அறிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு இலங் கையை சேர்ந்த தமிழ் கட்சிகளான தமிழீழ விடுதலை அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் காங்கிரஸ் சங்கம் என்ற சிவில் குழுவுடன் பொது வேட்பாளாரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டனர். அதன் அடிப்படையில் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் முக்கிய தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *