வயநாடு சீரமைப்பு பணிக்காக ஒன்றிய அரசிடம் ரூபாய் 2000 கோடி கோரும் கேரள அரசு

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், ஆக.10- கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஒன்றியக் குழுவிடம் மறுசீர மைப்பு பணிகளுக்காக உடன டியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம் என தெரிவித்தனர். மேலும் வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண் டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *