மாநிலங்களவைத் தலைவர் அத்து மீறுகிறார், நாகரீகமற்ற வார்த்தைகளை பேசுகிறார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜெயா பச்சன் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, ஆக. 10- மாநிலங்களவை உறுப்பினர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இது தொடர்பாக ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது அவர்களுக்கு ஜக்தீப் தன்கர் பதில் அளித்தார். இதனால் அவையில் காரசார விவாதம் நடந்தது.
ஒரு கட்டத்தில் ஜெயா பச்சனை நீங்கள் திரைப்பட நடிகையாக இருக்கலாம்; ஆனால்…? என பேசினார்.

இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபமடைந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.பின்னர் நாடாளுமன்ற வளா கத்தில் பேசிய ஜெயா பச்சன், “மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதைக் குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருக் கின்றன. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த குடிமக்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பேசும்போது அவரது மைக்கை அவைத் தலைவர் அணைத்தார். அவர் எவ்வாறு அப்படி செய்யலாம்? எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதித்திருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஜக்தீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த் தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. சில நேரங் களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார். உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்கிறார்.

நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜக்தீப் தன்கர் கூறினார். நான் 5ஆவது முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இல்லாதது. என்னைப் பற்றி

ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த செய்தியாளர் சந் திப்பின்போது காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க் கள் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *