மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க மேனாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்களுக்கு வீரவணக்கம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேற்குவங்கத்தில் அதிக காலம் முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசு அவர்களுக்குப் பிறகு, 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்கள், தமது 80-ஆம் வயதில் (8.8.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

முற்போக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்; சிறந்த கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இலக்கிய ஆளுமையாகவும் விளங்கியவர்.

அவரது மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
8.8.2024

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *