மேற்குவங்கத்தில் அதிக காலம் முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசு அவர்களுக்குப் பிறகு, 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்கள், தமது 80-ஆம் வயதில் (8.8.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
முற்போக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்; சிறந்த கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இலக்கிய ஆளுமையாகவும் விளங்கியவர்.
அவரது மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
8.8.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்