லண்டன்,ஆக.9- இங்கிலாந்தில் தீவிர வலதுசாரிகளின் இன வெறியை அடக்குங்கள், கலவரத்தை நிறுத்துங் கள்; அடைக்கலம் தேடி வரும் ஏதிலிகளைப் பாதுகாப்போம் என பாசிச எதிர்ப்பு இயக்கம் பேரணி நடத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் மூன்று சிறுமிகள் கத்தி யால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலையை செய்தது ஒரு முசுலிம் ஏதிலி என தீவிர வலதுசாரிகள் பொய்ச் செய்திகளைப் பரப்பினர்.
இதனைத் தொடர்ந்து தீவிர வலதுசாரி அமைப்புகள் ஏதிலி களுக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டனர். தொடர்ந்து கருப்பினத்தவர்கள், முஸ்லிம்கள், மசூதிகள், வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தனர்.
பல ஆண்டுகாலமாக இங்கி லாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில் வலதுசாரிகள் அக திகளுக்கு எதிராக இனவெறியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்து வருகின்றனர். இதன் விளை வாக தற்போதைய பொய்ச் செய்திகளின் பின்னணியில் பிரிஸ்டல், பிரைட்டன், பர்மிங்காம், லிவர்பூல், ஹேஸ்டிங்ஸ், வால்தம்ஸ்டோ உள்பட நாடு முழுவதும்பெரும் கலவரங்கள்வெடித்துள்ளன.
இதுவரை 100 க்கும் அதிகமான கலவரக்காரர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள் ளது. எனினும் இனவெறி அரசி யல் செய்யும் அமைப்பினர் மீண்டும் 100 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் இனவெறிக்கு எதிராகவும்,அமைதியை நிலை நாட்டவும், ஏதிலிகளின் பாது காப்பிற்காகவும் இனவெறி எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 25,000 க்கும் அதிக மானோர் மாபெரும் பேரணி நடத்தி இனவெறி பாசிச குழுக்கள் 100 இடங்களில் நடத்த இருந்த பேரணியை முறியடித்துள்ளனர்.
இந்தப் பேரணியில் இனவெறி பாசிசத்திற்கு எதிராக, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இனவெறி பாசிசத்தை அடக்குவோம், இங்கு வெறுப்புக்கு இடமில்லை, ஏதிலிகளுக்கு அடைக்கலம் உண்டு, அகதிகள் நமது எதிரி அல்ல, நமது எதிரிகள் சிறிய படகுகளில் வருவது இல்லை, அவர்கள் ஆடம்பரக் கார்களில் நம்மிடையே வலம் வருகிறார்கள் என பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் வந்தனர்.