கழகத் தலைவர் அறிவிப்பின்படி குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திட முடிவு

2 Min Read

காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

காரைக்குடி ஆக. 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் அவர் களின் நூற்றாண்டு விழாவை காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அதற்கான மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, தி.தொ.ச.மாவட்ட செயலாளர் சொ.சேகர், மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ. தில்லை ராசா,தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், இளைஞரணி தோழர் பிரவீன் முத்துவேல், மாணவரணி தோழர் செ.ஈழத்தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில், மாவட்ட மேனாள் கழக தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட மேனாள் ப.க. தலைவர் ப.சுந்தரம், தேவகோட்டை மேனாள் ப.க. நிர்வாகி ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மு.செல்லத்துரை, காளாப்பூர் பன்னீர்செல்வி ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது எனவும், கும்பகோணம் நகரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுததுவது எனவும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை கழகத் தலைவர் அறிவிப்பின்படி காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்துவது என்றும் அதற்கான பணிகளை இன்றே தொடங்குவது என்றும், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டி நிகழ்வுக்கு மாவட்ட கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நடத்திட நன்கொடை அறிவித்தவர்கள்
சாமி.திராவிடமணி ரூ 5000.00
ம.கு.வைகறை ரூ 5000.00
ந.செல்வராசன் ரூ 2000.00
சி.செல்வமணி ரூ 2000.00
வீர.முருகப்பன் ரூ 2000.00
பிரவீன் முத்துவேல் ரூ 2000.00
தி.தொ.ச. சேகர் ரூ 2000.00
சூரிய மூர்த்தி ரூ 2000.00

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *