காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்குடி ஆக. 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் அவர் களின் நூற்றாண்டு விழாவை காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அதற்கான மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, தி.தொ.ச.மாவட்ட செயலாளர் சொ.சேகர், மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ. தில்லை ராசா,தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், இளைஞரணி தோழர் பிரவீன் முத்துவேல், மாணவரணி தோழர் செ.ஈழத்தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில், மாவட்ட மேனாள் கழக தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட மேனாள் ப.க. தலைவர் ப.சுந்தரம், தேவகோட்டை மேனாள் ப.க. நிர்வாகி ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மு.செல்லத்துரை, காளாப்பூர் பன்னீர்செல்வி ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது எனவும், கும்பகோணம் நகரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுததுவது எனவும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை கழகத் தலைவர் அறிவிப்பின்படி காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்துவது என்றும் அதற்கான பணிகளை இன்றே தொடங்குவது என்றும், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டி நிகழ்வுக்கு மாவட்ட கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நடத்திட நன்கொடை அறிவித்தவர்கள்
சாமி.திராவிடமணி ரூ 5000.00
ம.கு.வைகறை ரூ 5000.00
ந.செல்வராசன் ரூ 2000.00
சி.செல்வமணி ரூ 2000.00
வீர.முருகப்பன் ரூ 2000.00
பிரவீன் முத்துவேல் ரூ 2000.00
தி.தொ.ச. சேகர் ரூ 2000.00
சூரிய மூர்த்தி ரூ 2000.00