பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
பத்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) 2021ஆம் ஆண்டே துவங்கியிருக்க வேண்டும். ஆயினும் இதுவரை அது மேற் கொள்ளப்படவில்லை. 2024-2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்காக உருப்படியான ஏற்பாடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக கிராம, ஒன்றிய, வட்ட மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டிருந்த நிர்வாக அமைப்பு முறைகளின் காலக்கெடு 2024 ஜூனுடன் முடிவடைந்துவிட்டது. அதனை நீட்டிப்பது சம்பந்தமாகவும் பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.
2020இல் தொடங்க வேண்டிய 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டி ருக்கிறது. அரசுத் தரப்பில் அந்த சமயத்தில் சொல்லப்பட்ட காரணம், கோவிட் தொற்று முடிவ டைந்த பின்னர், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகும். ஆனால் இப்போது, மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், 2024ஆம் ஆண்டில்கூட, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
பல்வேறு தரவுகளை வழங்கிடும் கணக்கெடுப்பு
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தி லிருந்தே மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பின்னரும் தவறா மல் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நடை பெற்ற 1941இல் கூட, பல்வேறு கட்டமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது எவ்வளவு மக்கள் இருக்கி றார்கள் என்கிற கணக்கை மட்டும் அளித்திடவில்லை; கிரா மப்புறங்க ளில் உள்ள வீட்டுத் தரவுகள், உழுதுண்டு வாழ்ந்தி டும் உழவர்களின் பல்வேறு பிரிவினர் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட விரிவான தரவுக ளையும் வழங்குகிறது. இது நகர்ப்புற-கிராமப்புற மக்கள், மொழி பேசும் குழுக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பற்றிய தரவுகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.
மக்கள்தொகை அடிப்படையிலான திட்டங்கள் பாதிப்பு
இவ்வாறு தரவுகளைப் பெறு வதன் மூலம்தான் பல்வேறு மக்கள் பிரிவினரின் நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்றவிதத்தில் திட்டங்களைத் தீட்டிட முடியும். உதாரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களில் 75 விழுக்காட்டினரும், நகர்ப்புற மக்களில் 50 விழுக்காட்டி னரும் கொண்டுவரப்படுவார்கள். மேலும் அவ்வாறு வெளியிடப்படும் மக்கள்தொகையின் அடிப்படை யில்தான் ஒதுக்கீடுகளைக் கணக்கிட முடியும்.
2021 மக்கள்தொகையைப் பயன்படுத்தி சுமார் 81.5 கோடி மக்கள் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள். 2024 மார்ச்சில் மேற்கொள்ளப் பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 93 கோடியாகும். இதன் பொருள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மேற்கொள்ளாததால், சுமார் 11 கோடி மக்கள் மானிய விலை யில் அளிக்கப் படும் உணவு தானியங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ப தாகும்.
மகளிர் இடஒதுக்கீடு 2029–லும் வராது
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு அளிப்பதற் கான அரசமைப்புச்சட்டத் திருத்தம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப்பின் தொகுதிகளை மறுவரையறை செய்தபின்னர் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இவ்வாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப் படாததால், மகளிர்க்கான இட ஒதுக்கீடு என்பதும் இப்போதைக்கு (குறைந்தபட்சம் 2029க்குள்) இல்லை என்றாகிவிட்டது.
நகரமயமாக்கல் வசதி – தொகுதி வரையறை…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லாததன் காரணமாக மற்றொரு வீழ்ச்சி என்னவென்றால், தற்போது பல கிராமங்கள் நகரமயமாகி இருக்கின் றன. எனினும் நகரங்களுக்கென நகரமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நகர்மன்ற நிர்வாகம் மற்றும் வசதிகளைச் செய்ய முடியவில்லை.
மக்கள்தொகை கணக் கெடுப்பை நடத்தாததன் தீங்கு விளைவிக்கும் விளைவு என்னவென்றால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி களின் எல்லை நிர்ணயம் நடைபெறாது. ஜனநாயகத்தில், ஒவ்வொரு நபரின் வாக்கும் சமமான அந்தஸ்தைப் பெறும் விதத்தில் தொகுதிகள் வரை யறுக்கப்பட வேண்டியது அவசிய மாகும்.
ஆர்எஸ்எஸ், பாஜகவின் பகுத்தறிவற்ற தன்மையால்…
அப்படியானால், மக்கள் தொகை கணக்கெடுப்பு க்கு உத்தரவிட அரசு ஏன் விருப்பம் காட்டவில்லை? கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்த அறிவியல் அடிப்படையில் நடத்தப்பட்ட புள்ளி விவர ஆய்வுகள் மீதான பொதுவான அவமதிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். பல்வேறு ஆய்வுகள் ஒடுக்கப் பட்டுள்ளன அல்லது கணக்கெடுப்புக்கான புள்ளி விவர அளவுருக்கள் அதை சிதைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜக அரசியலின் பகுத்தறிவற்ற தன்மையை ஊக்குவித்து கொள்கைகளை வகுத்ததன் ஒரு பகுதி இது. இந்த அரசாங்கம் இந்துத்துவா சித்தாந்தத்தால் இயக்கப்படுகிறது. உதார ணமாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2041 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் இந்துக்களைவிட அதிகமாகி விடுவார்கள் என்று எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் கூறிக்கொண்டி ருக்கிறார். இத்தகைய பகுத்தறி வுக்கு சம்பந்தமே இல்லாத கூற்றுக்களின் அடிப்படையில் அசாமில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களையும், நடவடிக்கைகளையும் நடை முறைப்படுத்திக் கொண்டி ருக்கின்றனர்.
அறிவியல் விரோதப் பார்வைக்கு பலி
பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளின் அறிவியல் விரோதப் பார்வைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பலியாகி விட்டது. எனவே கொள்கை உருவாக்கம் அறிவியல் தரவுகளால் உந்தப்படு வதை உறுதி செய்வதற்கும், சமூகத்தில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் நீதியை உறுதி செய்வதற்கும், மிகவும் தாமதமான 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும் அதற்கான ஆயத்தப் பணிகளை இதில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருவது அவசியம். அனைத்து ஜனநாயகப் பிரிவினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இது இருந்திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ‘தீக்கதிர்’, 7.8.2024