கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

7.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நிதி ஆதாரத்தை பெருக்க வழிவகை சொல்லுங்கள், திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
*அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்; துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்!
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது மருத்துவம், ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம்: இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
* உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு; முழு தரவுகளையும் அரசு தர வேண்டும், தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 84 வயதான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
* எனக்கு ஆளுநர் பதவி தராவிட்டால்? பாஜகவை எச்சரிக்கும் சிவசேனா முன்னாள் எம்.பி.; நவநீத் ராணாவின் ஜாதிச் சான்றிதழ் வழக்கை ஆளுநராக வில்லை எனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்கிறார்.
* இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த வார இறுதியில் டில்லியில் சந்தித்து பேச உள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெரிய அண்ணன்கள் போல உச்ச நீதிமன்றம் நடந்து கொள்வதா? தங்களது ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சனம்.
* என்னை மகாராட்டிரா முதலமைச்சராக ஆக்குங்கள்; காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் என் சி பி (எஸ்பி) தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்து, வலியுறுத்த டில்லி செல்கிறார் உத்தவ் தாக்கரே.
* இப்போது எப்படி முடிந்தது?, நீட் முதுகலை தேர்வு மய்யங்களை ஆந்திராவில் ஒதுக்கிய ஒன்றிய அரசு, எதிர்ப்பு கிளம்பியதும் தமிழ் நாட்டுக்குள்ளேயே இடமாற்றம் செய்து அறிவிப்பு.
தி ஹிந்து:
* பட்டியல் ஜாதியினர் உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த முடிவு.
* ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ அளவுகோலுக்கு கூடாது; ஒய்.எஸ்.ஆர். எம்.பி. கிருஷ்ணய்யா, மாநிலங்களவையில் கோரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உ.பி. மாடல்: உ.பி. மாநிலம், தர்பா, புலந்த்ஷாஹர் மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டியில் தடுப்பூசிகள், மருந்துகள் இல்லாமல் பீர் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிப்பு. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *