‘‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் பெற்றுக்கொண்டார்!

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2024) முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த “கலைஞர் 100 கவிதைகள் 100” நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நூல் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் உள்ளனர்.

அந்நூலில் முதலமைச்சர் அவர்கள் ‘பெரியார் வாழ்க!’ என்று எழுதி கையொப்பமிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கொடுத்தார். முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் “உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – தொகுதி 9” மற்றும் ‘‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’’ ஆகிய நூல்களை வழங்கினார். நூலாசிரியருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *