முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2024) முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த “கலைஞர் 100 கவிதைகள் 100” நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நூல் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் உள்ளனர்.
அந்நூலில் முதலமைச்சர் அவர்கள் ‘பெரியார் வாழ்க!’ என்று எழுதி கையொப்பமிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கொடுத்தார். முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் “உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – தொகுதி 9” மற்றும் ‘‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’’ ஆகிய நூல்களை வழங்கினார். நூலாசிரியருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார்.