புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மோகனூர் கிரமத்தில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம் 3.8.2024 அன்று மாலை 6.00 மணியளவில் கோ.ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் கா. காரல்மார்க்ஸ் வரவேற்புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலளார் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரை வழங்கினார். இறுதியாக கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், UCPI மாவட்ட குழு உறுப்பினர் க. அம்பிகாபதி, திமுக. ஒன்றிய துணைச் செயலாளர் த. கருப்பையன், மேனாள் ராணுவ வீரர் த. முத்துச்சாமி, மோகனூர் பவுன்ராஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ. பிரகாஷ் நன்றியுரை கூறினார்.
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books