திருவனந்தபுரம், ஆக. 5 வயநாட்டில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக கேரள அரசு தெரி வித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும், நேற்று (4.8.2024) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுவரை 49 டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட் டுள்ள உடல்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல மொத்தம் 149 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதுவரை 221 உடல்கள், 166 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 380 உடற்கூராய்வுகள்(உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் உள்பட) மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரல்மலையில் மண்ணில் புதைந் துள்ள உடல்களை கண்டுபிடிக்க டிரோன்கள் மூலம் தேடுதல் பணி 6-ஆவது நாளாக தொடருகிறது. உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தவறான செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்தார்.இது தொடர் பாக பேசிய அவர், நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது.
குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் செய்து வருபவர்கள், பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான செய்தியை பரப்புபவர்களின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.