இறந்து போனவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக தகவல்

Viduthalai
2 Min Read

மோடி அரசின் மருத்துவக் காப்பீட்டுத் 

திட்டத்திலும் முறைகேடு – மெகா மோசடி

புதுடில்லி, ஆக.14 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் மெகா மோசடி நடைபெற்றிருப்பதை ஒன் றிய தலைமை தணிக்கை அலுவலக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 

கிராமப்புற குடும்பங்களில் 85.9 சதவீதம் பேரும் நகர்ப்புற குடும் பங்களில் 82 சதவீதத் தினரும் மருத்துவ சிகிச்சைபெறுவதில் சிக் கல்களைச் சந்திக்கின்றனர்; மக்கள் தொகை யில் 17 சதவீதத்திற்கும் அதிகமானோர் குடும்ப பட்ஜெட் டில் குறைந்தது 10 சதவீதத்தை மருத் துவத் தேவைகளுக்காக செலவிடு கின்றனர்  என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO)  ஆய்வு கூறுகிறது. மருத்துவச் செலவுகளே பல குடும்பங்களை கடனில் தள்ளு கிறது, கிராமப்புற இந்தி யாவில் 24 சதவீதம் குடும்பங்களும்  நகர்ப் புறத்தில் 18 சதவீத  மக்களும் தங்களது மருத்து வத் தேவைகளை கடன் வாங்கியே பூர்த்தி செய்கின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) 2018-செப்டம்பர்,  23 அன்று ஜார்க் கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டம் 50 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை இலக் காகக் கொண்டு தொடங்கப்பட்டது. “உலகின் மிகப்பெரிய அரசு நிதி யுதவி சுகாதாரத் திட்டம்” இது என்றும் கூறப்பட்டது. ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஒரு குடும் பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் செல வினங்களை நேரடியாக சம்பந்தப்பட்ட மருத் துவமனையிலேயே செலுத்திவிடும் என்றார் பிரதமர் மோடி.

தணிக்கைத் துறை அம்பலம்

ஆனால் தற்போது இந்தத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இறந்து போன வர்களும் சிகிச்சை பெற்று வருவ தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள இந்த மோசடியை, ஒன் றிய அரசு “இந்தத் திட்டம் தொடங் கப்பட்டபோது அலைபேசி எண் கட்டாயமாக்கப்படவில்லை. வெறும்  ஆதாரை மட்டுமே கவனத் தில் கொண்டோம்” எனக் கூறி மோசடியிலிருந்து தப்பிக்கப் பார்க் கிறது. திட்டத்தின் பயனாளிகள் தரவு தளத்தில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் ஒரே அலைபேசி எண் ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர்: 9999999999. 

கிட்டத்தட்ட 1.4 லட்சம் பேர் 8888888888 என்ற எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ளனர், மேலும் 96,000 பேர் மற்றொரு போலி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள னர். ஒரே ஆதார் எண்ணுடன் பல பயனாளிகள் இணைக்கப்பட்டுள் ளது அரங்கேறியுள்ளது. தமிழ் நாட் டில் 4,761 பதிவுகள் வெறும் ஏழு ஆதார் எண்களுடன் இணைக்கப் பட்டுள்ளன.  இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கை பிரிவு மோசடியை அம்பலப்படுத்தியதால் ஒன்றிய சுகா தார அமைச்சகம் இந்தத் திட்டத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. கிட்டத் தட்ட 7.5 லட்சம் பயனாளிகள் ஒற்றை அலை பேசி எண்ணுடன் இணைக் யீப்பட்டுள்ளனர் என்று தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசோ பய னாளிகளின் சரிபார்ப்பில் அலைபேசி எண்கள் கவ னத்தில் கொள்ளப்படவில்லை என்கி றது ஒன்றிய சுகாதார அமைச்சகம். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *