கோவை, ஆக. 14- கோவை புலிய குளம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா – வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சார கூட் டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் முன்னிலையில், புலிய குளம் தர்மலிங்கம் தலைமையில் எழுச்சி யுடன் நடைபெற்றது. மாநகர தலைவர் செந்தில்நாதன் வரவேற்பு வழங்கினார். கூட்டத்தில் கழகப் பேச்சாளர் மாவட்ட செயலாளர் புலிய குளம் க.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது கூறியதாவது
கேரளாவில் உள்ள வைக்கம் வீதியில் தெருவில் மக்கள் நடக்கக் கூடாது என்கிற கொடுமையை கண்டித்து தந்தை பெரியாரின் தலைமையில் மனித உரிமைப் போராட்டம் நடைபெற்றதை விரிவாக பல வரலாற்று நிகழ்வு அழகாகத் எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை நினைவு கூறும் விதமாக தமிழ்நாடு சட்டமன்றத் தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆற்றிய பல அறிவார்ந்த உரைகளை நகைச்சுவை பேச்சுக் களை சுட்டி காட்டி டாக்டர் கலை ஞர் அவர்களின் பல பரிமாணங் களை பன்முகத்தன்மை மிகவும் சிறப்பாக எடுத்து காட்டினார்
கூட்டத்தில் மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஆ.பிரபா கரன், மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்செல்வம், மாவட்ட துணை செயலாளர் திக காளி முத்து, மாநகர தலைவர் திக செந் தில்நாதன், மாநகர செயலாளர் திராவிடமணி, சுந்தாரபுரம் பகுதி கழக தலைவர் தெ.குமரேசன், கணபதி பகுதி கழக தலைவர் கவி கிருஷ்ணன், வடவள்ளி பகுதி கழக தலைவர் ஆட்டோ சக்தி, மாவட்ட கழக அலுவலகம் & ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா, மாநகர அமைப்பாளர் யாழ் வெங்கடேஸ், பகுத்தவாளர் கழகம் ஆடிட்டர் ஆனந்தராஜ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் இரா வெங் கடாசலம், கழகப் பொறுப்பாளர் கள் கழக தோழர்கள் அதேபோல் திராவிட முன்னேற்றக் கழக இராம நாதபுரம் பகுதிகழக தலைவர் ப.பசுபதி, பகுதி கழக அவைத் தலைவர் சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவொளி, 66ஆவது வார்டு கவுன்சிலர் சிபிஎம் கே.நாகராஜ், 66ஆவது வார்டு திமுக செயலாளர் நவீன் பாலசுப்பிரமணியம், 65ஆவது வார்டு வட்ட கவுன்சிலர் முனியம் மாள் பாலமுருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், அந் தோனியம்மாள், பகுதி கழக மாண வர் கழக அமைப்பாளர் வீ.பகல வன், உள்ளிட்ட தோழமை கட்சி தோழர்கள் பங்கேற்றனர்
நிறைவாக பீளமேடு பகுதி கழக தலைவர் இல. கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார்.