வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம் முய்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அதிதி எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘இன்று விடுமுறை, மதியம் என் அம்மா டி.வி.யை ஆன் செய்தபோது வயநாடு மேப்பாடியில் நிலச்சரிவு பற்றிய செய்தியை பார்த்தேன். அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பலர் உயிர் இழந்தனர். பலரை இன்னும் காணவில்லை. ஏன் கடவுள் யாரையும் காப்பாற்றவில்லை?’
இவ்வாறு சிறுமியின் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்

Leave a Comment