புதுடில்லி, ஆக 3 மாநி லங்களுக்கு பாகுபாடில் லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளி யிட்ட பதிவில், ‘உத்தராகண்டில் மேகவெடிப்பு, அதிபலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளால் பலா் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு ராணுவம் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பல மாநிலங்களில் மேகவெடிப்பு, பலத்த மழை, வெள்ளம், வறட்சி ஆகியவை வழக்கமாக நடைபெறும் சாதாரண நிகழ்வாகியுள்ளன. பருவநிலை மாற்றத்துடன் நாடு போராடி வருகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீா்வு காண அறிவியல்பூா்வமான அணுகுமுறை மூலம் அனைவரின் பங்களிப்புடன் உறுதியான கொள்கையை வகுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பேரிடா் மேலாண்மையையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு நோ்மறையான முன்னெடுப்பை மேற்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற இயற்கை பேரிடா்களை எதிர்கொள்ள, மாநிலங்களுக்கு பாகு பாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
எத்தகைய மனித நேயம்!
தாயை இழந்த குழந்தைக்கு
தாய்ப்பால் புகட்டிய பெண்
மூணாறு, ஆக.3- கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் சஜின். விவசாயி. இவரது மனைவி பாவனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், நான்கு மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது வய நாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 297 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர நிகழ்வை எண்ணி சஜினும், அவரது மனைவி பாவனாவும் கவலை அடைந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய 4 மாத ஆண் குழந்தை தாய்ப்பா லுக்கு அழுது கூச்சலிட்டது. குழந்தைக்கு பாவனா தாய்ப்பால் கொடுத்து பசியை போக்கினார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வயநாட்டில் நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகள் தாய்ப்பாலுக்கு எவ்வளவு கஷ்டப்படும் என்றும் கணவரிடம் கூறி பாவனா வேதனை அடைந்தார். அந்த குழந்தைகளுக்கு தான் தாய்ப்பால் புகட்டுகிறேன் என்று சஜினிடம் கூறினார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
ஒரு குழந்தை அழுதால் அதற்கு தாயானவள் பாலை ஊட்டி பசியாற வைத்து தூங்க வைப்பாள். தாய்க்கு தான், குழந்தையின் பசியை எப்படி போக்குவது என்று தெரியும். எனவே தாய்ப்பால் எவ்வளவு அவசியம் என்பதை அந்த இணையர் உணர்ந்தனர்
உடனே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை சஜின் வெளியிட்டார். இதைப் பார்த்து அவர்களின் அலைபேசி எண்களுக்கு வயநாட்டில் உள்ள நிவாரண முகா மில் இருந்து அழைப்பு வந்தது. உடனே ஒரு ஜீப்பில் சஜினும், பாவனாவும் தங்கள் குழந்தைகளுடன் வயநாட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு முகாமில் தாயை இழந்து தங்க வைக்கப்பட்டு இருந்த ஒரு 6மாத குழந்தைக்கும், 3 வயது குழந்தைக்கும் பாவனா தாய்ப்பால் புகட்டினார்.
இதுகுறித்து அந்த இணையரிடம் கேட்டபோது, அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து பராமரித்து, அவர் கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை முகாமில் தங்கி இருப்போம் என்றனர். இடுக்கி இணையரின் இந்த மனிதநேய செயலை பார்த்து அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.