இதுதான் தகுதித் திறமையோ! நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் மீண்டும் தோல்வி

1 Min Read

அகமதாபாத், ஆக.3- மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழ்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று இருந்தார். மாநிலமே அவரை கொண்டாடிய நிலையில், பிளஸ்-2 தேர்வில் அந்த மாணவி தோல்வி அடைந்தவர் என்ற உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

அதுவும் அவர் இயற் பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண்களை எடுத்து தோல்வி அடைந்து இருந் தார். இவ்வாறு முக்கிய பாடங்களில் தோல்வி அடைந்த ஒருவரால் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே அந்த மாணவி ஜூன் மாதம் நடந்த பிளஸ்- 2 துணைத்தேர்வை எழு தினார். அதிலும் அவர் குறிப்பிட்ட அந்த 2 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் மீண் டும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *