புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் காரை சி. மு.சிவம் நினைவாக “திராவிடத்தால் நிமிர்ந்தோம்” கருத்தரங்கம்

viduthalai
1 Min Read

புதுச்சேரி, ஆக. 1- சுயமரியாதைச் சுடரொளி திராவிட இயக்க முன்னோடி காரை சி. மு.சிவம் நினைவாக “திராவிடத்தால் நிமிர்ந்தோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெயபாலன் பெயரில் நினைவு மேடை அமைத்து புதுச்சேரி ராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஒருங் கிணைப்பில் 27.7.2024. அன்று நடை பெற்றது.

நிகழ்வில் பெரியாரிய சிந்தனை யாளர்கள் வழக்குரைஞர் வீ.அழக ரசன், செ.சுரேஷ், பூ. ஆ. இளையரசன் சிறப்புரை ஆற்றினர்.

திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, வீரமோகன், நாத்திகன், இந்திய ஒடுக் கப்பட்ட சிறுத்தைகள் கட்சி தோழர் வழக்குரைஞர் சிகாமணி, ப.பசுபதி.கு.சபரி, மாவட்ட கழகத் தலைவர் அன்பரசன், குப்புசாமி, கண்ணன் வீரமணி உள்ளிட்ட தோழர்கள் தொடக்க உரை ஆற்றினர்.

அண்ணா பேரவை தலைவர், திராவிட இயக்க ஆய்வாளர் சிவ.இளங்கோ, புதிய ஜனநாயக தொழிலாளர் முன் னணி புதுவை மாநில செயலாளர் கி.மகேந்திரன், B.Bold. இயக்கத்தின் தலைவர் தோழர் சு.பஷீர் அகமது, திராவிட முன்னேற்றக் கழகம் நியாஸ், அமுதா குமார், கடலூர் மாவட்டம் திராவிடர் கழகத் தோழர் செ. இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு பெற்றனர்.

திராவிடர் கழகம்

தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் பி.பிரவீனா, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஆ.அக்சல்யா மேரி, லாரன்ஸ், பசுபதி, அரவிந்தன், அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் அனைத்துத் தோழர்களுக்கும் புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் அ.ச.தீனா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *