சென்னை, ஆக. 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
குமரிக் கடல் முதல் இமயப் பெரு மலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி.
இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77ஆவது விடுதலை நாளைக் கொண் டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட் டத்துக்கும் தலைவணக்கம் செலுத் தவே! போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவேந் தல் ஆகும்.
விடுதலை அடைவதற்கு முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று அனைவரையும் பாடச் சொன் னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத் தான் இருக்கும் என்று அந்தத் தமிழ்க் கவி கனவு கண்டார். நாட்டின் 77ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென் னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக் களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக் கானதா? என்ற கேள்வியை எழுப்பு கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ் நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச் சாட்சியை உலுக்கி வருகிறது.
ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். ‘நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட் டேன்’ என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ் நாட்டு மாணவர்களையும், இளைஞர் களையும் அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட் டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.
தமிழ் மக்களைப் பற்றி அக்கறை யுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14.8.-2023) கடிதம் அனுப் புகிறேன்.
ஆளுநர் அவர்கள், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்க வில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத் துவக் கனவை அப்படித்தான் சிதைப் பேன் என்று நியமனப் பதவியில் இருக் கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என் றால், இது கல்வித் துறை மீது நடத்தப் படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ் நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப் பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் – உயர் கல்வித் துறையைக் குழப்பியும் – தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் – இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக் கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேதகு ஆளுநர் 15.8.2023 ஆம் தேதி மாலையில் வழங்கும் தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அது கிடைக்கப் பெற்றோம்.
ஆனால், ஆளுநரின் நடவடிக்கை களும், செயல்களும் அவரது அதிகார எல்லைகளை மீறி இருப்பதாலும். குறிப்பாக ‘நீட்’ தேர்வுக்கான விதிவிலக்கு கேட்ட மாணவரின் பெற் றோரை அவமதித்து, தற்போது அவரது பொறுப்பில் இல்லாத “நீட்” விலக்கு மசோதாவிற்கு எப்போதும் கையெ ழுத்து போடமாட்டேன் என்ற ஆத்திர மூட்டி, அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்வை புறக்கணிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்க ளுக்கும் தொடர்ந்து துரோகங்களை இழைத்து வருவதுடன், தான் ஏற்றுக் கொண்ட மதவெறி கருத்துக்களை கூச்சநாச்சமின்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொதுவெளியில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக நீடிக்கின்ற வகையில் ஆளு நர் மாளிகை ஏற்பாடு செய்யும் எந்த விருந்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்வதில்லை எனவும், அவற்றை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருந்து ஒத்திவைப்பாம்
– ஆளுநர்
ஆளுநர் மாளிகை 14.8.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி அதன் சுற்று வட்டாரப் பகுதகளில் கனமழை செவ்வாய்க்கிழமை யும் (ஆக. 15) தொடருமென இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளதால் தேநீர் விருந்து ஒத்தி வைப் பதாக ஆளு நர் மாளிகை குறிப்பு சொல்லுகிறது.