சென்னை, ஆக. 15- சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் முதல் அமைச்சர் மாண்புமிகு முதல் அமைச்சர் தேசியக் கொடியை இன்று (15.8.2023) காலை 9 மணிக்கு ஏற்றினார்.
முதலாவதாக – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர் விருதும்” ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கிச் சிறப்பித்தார்.
“தகைசால் தமிழர் விருது” வழங்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் பற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான – சிறப்பான குறிப்புகள் வருமாறு:
“முனைவர் கி.வீரமணி அவர்கள் கடலூர் மாவட்டம் பழைய பட்டினத்தில் வாழ்ந்த சி.எஸ்.கிருஷ்ணசாமி-மீனாட்சி இணையருக்கு டிசம்பர் 2, 1933 அன்று மூன்றாவது மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சாரங்கபாணி ஆகும். 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு. “சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு” ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர். 1962 இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று. தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவர். மேலும், உண்மை, பெரியார் பிஞ்சு. The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும். இணைய தளங்கள் வாயிலாக மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவர். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல விருதுகளைப் பெற்றவர்கள் விவரம் வருமாறு:
டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல் கலாம் விருது
– முனைவர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி.
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா
– சாவ்லா விருது – திருமதி நா.முத்தமிழ்ச்செல்வி, செங்கல்பட்டு.
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது
1. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
2. சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ஈ.தேரணிராஜன்
3. கோவை புறநகர் காவல் கண்கணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் (அய்.பி.எஸ்.).
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்
1. சிறந்த மருத்துவர் – த.ஜெயக்குமார், சென்னை
2. சிறந்த நிறுவனம் – சாந்தி நிலையம், கன்னியாகுமரி
3. சிறந்த சமூகப் பணியாளர் – ரத்தன் வித்யாகர், உதவும் கரங்கள்
4. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம் – டெடி எக்ஸ்போர்ட்ஸ், மதுரை
5. மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்படும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இராமநாதபுரம்
மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது
சிறந்த சமூக சேவகர் விருது – டி.ஸ்டான்லி பீட்டர், கோவை
சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – “கிராமத்தின் ஒளி” – சின்னசேலம்
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது
1. பெருநகர சென்னை மாநகராட்சி – 9 மற்றும் 5ஆவது மண்டலம்.
2. சிறந்த மாநகராட்சிகள்: திருச்சி, சிதம்பரம்
3. சிறந்த நகராட்சிகள்: இராமேசுவரம் – திருத்துறைப் பூண்டி – மன்னார்குடி
4. சிறந்த பேரூராட்சிகள்: விக்கிரவாண்டி
(விழுப்புரம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), வீரக்கல்புதூர் (சேலம்)
முதலமைச்சரின்
மாநில இளைஞர் விருதுகள்
சி.தஸ்தகீர் (நீலகிரி), ரா.தினேஷ்குமார் (திருச்சி), கோ.கோபி (இராணிப்பேட்டை), ப.ராஜசேகர் (செங்கல் பட்டு), மு.விஜயலட்சுமி (சென்னை),
செ.சந்திரலேகா (மதுரை), கவிதா தாந்தோணி
(காஞ்சிபுரம்)
போதைப் பொருள் உற்பத்தி
மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்
அஸ்ரா கார்க் (காவல்துறை தலைவர், மதுரை), வெ.பத்ரி நாராயணன் (காவல் கண்காணிப்பாளர், கோவை), டோங்கரே பிரவின் உமேஷ் (காவல் கண்காணிப்பாளர், தேனி), மா.குணசேகரன் (காவல் உதவி ஆணையர், கோவை), சு.முருகன் (காவல் உதவி ஆய்வாளர், நாமக்கல்), இரா.குமார் (முதல்நிலைக் காவலர், நாமக்கல்)