புதுடில்லி, ஆக.1 புதிய குற்றவியல் சட்டங்களில் பிரிவு 144A CrPC மற்றும் 153A.A IPC விடுபட்டுள்ளது. இது வகுப்புவாத சக்திகளுக்கு சாதமாக அமையும் என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மக்களவையில் இருந்து பெருமளவிலான உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், எந்தவித விவாதமும் இன்றி இந்த சட் டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் விளைவாக, சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்த மூன்று சட்டவிரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பிற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளது. அவை 1993இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் பரவலான வன்முறை வெடித்தது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள், உயிரிழந்தனர். அமைதியைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் புதிய பிரிவு 144ஏ-அய் சேர்த்தது. இது ஊர்வலங்களில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதையோ, பொது இடங்களில் ஆயுதங்களுடன் பயிற்சி நடத்துவதையோ தடை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்தது.
அதே நேரத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய பிரிவு 153ஏ சேர்க்கப்பட்டது. சி ஆர் பி சி பிரிவு 144எ-இன் கீழ் விதிக்கப்படும் தடை உத்தரவுகளை மீறி ஊர்வலங்களில் ஆயுதங்கள் எடுத்துச் செல்பவர்களுக்கோ, பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி நடத்துபவர்களுக்கோ 6 மாதம் வரை சிறை தண்டனையும், ரூ.2,000 வரை அபராதமும் விதிக்க இப்பிரிவு வழிவகை செய்தது.
ஆனால், புதிய பாரதீய நாகரிக சுரக்ஷா சங்கிதா (பிஎன் எஸ் எஸ்) 2023 மற்றும் பாரதீய நியாய சங்கிதா (பி என் எஸ்) 2023 ஆகியவற்றில் பிரிவு 144எ அல்லது பிரிவு 153எ.எ போன்றவைகளில் அந்த விதிகள் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வேண்டுமென்றே விடுபட்ட பிரிவுகள், வகுப்புவாத அமைப்புகள் ஊர்வலங்களில் வாள்கள் மற்றும் திரிசூலங்களை பகிரங்கமாக எடுத்துச் செல்லவும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் தங்கள் அணிவகுப்புகளில் தடிகள் மற்றும் வாள்களை ஏந்தி செல்லவும் வழிவகை செய்கிறது.
2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டு தாக்குதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த தாக்குதல்களின் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். பாஜக ஆளும் மாநில அரசுகள் இந்த வன்மூறைகளை கண்டித்ததில்லை, மாறாக வன்முறையாளரின் நடவடிக்கைகளை வகுப்புவாத அமைப்புகளை ஊக்கம் கொடுக் குவகையில் நடந்துகொள்கிறது
வாள்கள், திரிசூலங்கள், தடிகள் போன்ற ஆயுதங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துவது சமூகத்தில் உள்ள குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து வெளிவந்த உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்றே தெரிகிறது.
எனவே, வகுப்புவாத சக்தி களின் வன்முறை நடவடிக் கைகளை கட்டுப்படுத்த கடுமை யான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம். இதற்காக, முன்னாள் சி.ஆர்.பி.சி-ன் பிரிவு 144எ-ஐ பி.என்.எஸ்.எஸ். -லும், மேனாள் அய் பி சி-ன் பிரிவு 153எ.ஏ-அய்.பி. என் எஸ்-லும் சேர்ப்பது மிகவும் அவசியம் ஆகவே உள்துறை அமைச்சர் இந்த கோரிக்கையில் கவனம் செலுத்தி இதனைச்சேர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்ற அமித்ஷாவிற்கு எழுதிய கடித்ததில் முனைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்