உள்நாட்டு விமானங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்பு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூலை 31- உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்க ஒன்றிய விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வில் நேற்று (30.7.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.கனகராஜ், “இலங்கை, மலேசியா, பிரான்சு போன்ற நாடுகளில்கூட, விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், “உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கக் கோரி மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *