‘நீட்’ எதிர்ப்பு வாகனப் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு!
ஆவடி, ஜூலை 30- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடலில் பெரியார் பிறந்த நாளை சிறப் பாகக் கொண்டாட தீர்மானம் நிறை வேற்றமும், நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் ஆவடி மாவட்டம் சார்பாக சென்ற தோழர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.
ஆவடி பெரியார் மாளிகையில் 28.07.2024 அன்று மாலை 5 மணிக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் தொடங்கியது.
மாவட்ட கழகக் காப்பாளர் பா.தென்னரசு, மாவட்டச் செய லாளர் க.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் வை.கலையரசன்‑ கடவுள் மறுப்புக் கூறி தொடங்கி வைத்தார்.
தோழர்களுக்கு பாராட்டு!
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிப் பொறுப்பாளர்களும் தங்கள் ஆலோசனைகளையும், மாவட்டத்திலிருந்து நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பயணத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் ஆவடி மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட தோழர்களான பசும்பொன், செ.பெ.தொண்டறம் இருவருக்கும் கருப்பு துணியும், அம்பத்தூர் ஏழுமலை, சென்ன கிருஷ்ணன், வ.ம.வேலவன், வை.கலையரசன், எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட கே.கே.நகரைச் சேர்ந்த இரா.அருள் ஆகியோ ருக்கு லுங்கியும் கழகக் காப்பாளரால் அணிவிக்கப்பட்டது. தொண்டறம் கலந்துகொள்ள இயலாத நிலையில் அவருக்குப் பதிலாக அவரது தாயார் பூவை செல்வி அணிவிக்கப்பட்டது.
பங்களிப்பும்! பங்கேற்பும்!
நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவரும் ஒருமனதாக கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்று போல் பேசினர். இறுதியில் மாவட்டத் தலைவர் தோழர்கள் கோரிய தீர்மானத்தையே வாசித்தார். அனைவரும் ஒருமன தாக நிறைவேற்றித் தந்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப் பையும், பங்கேற்பையும் உறுதி செய்தனர். விடுதலை சந்தாக்கள் தருவதையும் தொடரவேண்டும் என்றும், ஏற்கெனவே கடந்த கலந்து ரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானமும் நினைவூட்டப்பட்டது.
முதலில் கொடி மரங்கள் சரி பார்க்கப்பட்டு, அதன் நிலையை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்க ஏழுமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு கொடிமரப் பட்டியல், அழைப்பிதழ் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணி மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மு.இரகுபதி, க.கார்த்திகேயன், மா.சிலம்பரசன், க.ச.பெரியார் மாணாக்கன், கொரட்டூர் இரா.கோபால், இரா.கலை வேந்தன், சி.தே.கீதா, சி.வச்சிரவேலு, அ.வெ.நடராஜன், பூ.இராமலிங்கம், அய்.சரவணன், இ.தமிழ்மணி, கி.மணிமேகலை, உடுமலை வடிவேல், குமணஞ்சாவடி இரா.பகுத்தறிவு, எஸ்.ஜெயராமன், எம்.கே.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சி.வஜ்ரவேலு நன்றி கூறி இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலை நிறைவு செய்தார்.