பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் க.பொன்முடி

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

விழுப்புரம்,நவ.18- நிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் உயத்தப்படாது என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் 17.11.2023 அன்று க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:

அண்ணாமலை பல்கலைக்கழ கம் அரசுடைமையாக்குவதற்கு முன்பு, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது உதவிப் பேராசிரியர் களுக்கான தகுதிகள் தளர்த்தப் பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவைகள் சுட்டிக்காட்டப்பட் டதன் அடிப்படையில் 56 உதவிப் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யவதற்கான கட்டாயம் ஏற் பட்டதன் அடிப்படையில், பல் கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவின் நடவடிக்கையின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் களுக்கு எதிர்காலங்களில் தகுதி கேற்ப வேலை வாய்ப்பில் முன் னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

அனைத்து பல்கலைக்கழகங்களி லும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படவேண் டும். இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் பல்கலைக் கழகங்களில் தேர்வு கட்டணம் ரூ.150-லிருந்து  ரூ.225-ஆக உயர்த்தி யுள்ளார்கள். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந் தர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். தேர்வுக்கட்டணம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தேர்வு க்கட்டுபாட்டாளர்களுடன் கலந்துப்பேசி ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணத்தை மாணவர்க ளிடம் வசூலிக்க  முடிவு எடுக்கப் படும்.

எனவே நிகழ் பருவத் தேர்வில் தேர்வு கட்டணத்தில் எந்த மாற்ற மும் இருக்காது. பழைய தேர்வுக் கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும்.

திருவள்ளூவர் பல்கலைக்கழகத் தில் நடைபெற்றுள்ள வினாத்தாள் குளறுபடிகள் குறித்து  உயர்கல்வித் துறை செயலர் மூலம் உரிய விசா ரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

இதில் யார் மீது தவறும் இருந் தாலும் துறைரீதியான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று க.பொன்முடி தெரிவித்தார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *