பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் க.பொன்முடி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

விழுப்புரம்,நவ.18- நிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் உயத்தப்படாது என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் 17.11.2023 அன்று க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:

அண்ணாமலை பல்கலைக்கழ கம் அரசுடைமையாக்குவதற்கு முன்பு, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது உதவிப் பேராசிரியர் களுக்கான தகுதிகள் தளர்த்தப் பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவைகள் சுட்டிக்காட்டப்பட் டதன் அடிப்படையில் 56 உதவிப் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யவதற்கான கட்டாயம் ஏற் பட்டதன் அடிப்படையில், பல் கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவின் நடவடிக்கையின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் களுக்கு எதிர்காலங்களில் தகுதி கேற்ப வேலை வாய்ப்பில் முன் னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

அனைத்து பல்கலைக்கழகங்களி லும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படவேண் டும். இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் பல்கலைக் கழகங்களில் தேர்வு கட்டணம் ரூ.150-லிருந்து  ரூ.225-ஆக உயர்த்தி யுள்ளார்கள். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந் தர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். தேர்வுக்கட்டணம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தேர்வு க்கட்டுபாட்டாளர்களுடன் கலந்துப்பேசி ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணத்தை மாணவர்க ளிடம் வசூலிக்க  முடிவு எடுக்கப் படும்.

எனவே நிகழ் பருவத் தேர்வில் தேர்வு கட்டணத்தில் எந்த மாற்ற மும் இருக்காது. பழைய தேர்வுக் கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும்.

திருவள்ளூவர் பல்கலைக்கழகத் தில் நடைபெற்றுள்ள வினாத்தாள் குளறுபடிகள் குறித்து  உயர்கல்வித் துறை செயலர் மூலம் உரிய விசா ரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

இதில் யார் மீது தவறும் இருந் தாலும் துறைரீதியான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று க.பொன்முடி தெரிவித்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *