அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 28- அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

உத்தரப் பிரதேசத்தில் கான்வா் (காவடி) யாத்திரையையொட்டி, உணவகங்களை நடத்தும் இசுலாமிய உரிமையாளா்கள் தங்கள் பெயரை குறிப்பிட மாநில அரசு கட்டாயப்படுத்துவதாக வெளியான அறிக்கை குறித்து அமெரிக்க செய்தித் தொடா்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவா், ‘இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளையும், இந்த விதிகளை அமல்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதையும் நாங்கள் அறிந்துகொண்டோம்.
தற்போது இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை. உலகில் உள்ள அனைவருக்கும் மதச் சுதந்திரம் உள்ளது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *