அமெரிக்க நாட்டின் மேனாள் அதிபர் ட்ரம்புக்கு கைது-வாரண்டு

Viduthalai
2 Min Read

வாசிங்டன், ஆக. 16 – அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் டிரம்ப் (வயது 77). அங்கு அடுத்த ஆண்டு நடை பெற உள்ள அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார். 

ஆனால் டிரம்ப் மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்க ளுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவ ணங்களை கடத்தி சென் றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. ஜார் ஜியா மாகாணத்தில் 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றா கும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

அந்த சமயத்தில் ஜோ பைட னுக்கு எதிரான வாக்குகளை கண்டறி யும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒரு வருடன் டிரம்ப் அலை பேசியில்  பேசுவது போன்ற ஒலிப்பதிவு அங்குள்ள சமூகவலைதளங்க ளில் கசிந்தது.

ஆனால், இந்த வழக் குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி என கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார். எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை அங் குள்ள ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக் கும் கைது வாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதேசமயம் வருகிற 25-ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக் கப்படலாம் என நீதிமன்ற  வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *