கருநாடகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து விட்டதாக பாஜக மேனாள் அமைச்சரே குற்றம்சாட்டுகிறார்

viduthalai
1 Min Read

பெங்களூரு, ஜூலை 28 கருநாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், அங்கு நிலவி வரும் பிரச்சினைகளுக்கு, எதிர்க்கட்சியான பாஜக எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் இருப்பதாக, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அரவிந்த் கூறியதாவது, “கருநாடக மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநில அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி, மக்களின் குரலாக இருக்க வேண்டிய பாஜக, ஒரு எதிர்க்கட்சியாக செயல்படுவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

அரசின் ஊழல்கள், தவறான நிர்வாகம் மற்றும் தோல்விகளை அவையில் கூறுவதற்கு, பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு இருந்தபோதிலும், பாஜகவினர் அந்த வாய்ப்பை தவற விட்டனர்.

பெங்களூரு உள்பட பல மாவட் டங்களில் டெங்கு பரவி வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்றும், மாநில மக்களின் துன்பங் களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் பாஜகவினர் நினைக்க வில்லை என்பது வருத்தத்திற்குரியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க் கட்சியாக பாஜக முற்றிலும் தோல்வி யடைந்து விட்டது.

அவையில் பங்கேற்ற பாஜகவினர், வரும் நாட்களில் எவ்வாறு பெரிய போராட்டங்களில் ஈடுபட முடியும்? என்று தொண்டர்கள் நினைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

ஒரு காலத்தில் அவையில் கர்ஜித்து, மிகக் குறைந்த எண் ணிக்கையிலான இடங்கள் இருந்த போதிலும் மக்களின் துயரங் களுக்கு போராடியது” என்று தெரி வித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *