“ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?!” மம்தா அவமதிக்கப்பட்ட விவகாரம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

2 Min Read

சென்னை, ஜூலை 28 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான நிதி நிலை அறிக்கையை கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், பாஜக ஆளும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களே இடம் பெற்றன.

மேலும் அந்த மாநிலங் களுக்கு சிறப்பு நிதி ஒதுக் கீடும் செய்யப்பட்டது. தனது நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள பாஜக செய்திருக்கும் இந்த செயலுக்கு மட்டுமின்றி, ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான நிதி நிலை அறிக்கைக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி தலைமையில் நடைபெறும் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல மைச்சர் ரங்கசாமியும் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். மொத்தம் 10 மாநில முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா மட்டும் பங்கேற்றார்.

அப்போது அவர் அந்த கூட்டத்தில் உரை யாற்றும்போது அவரது ஒலி வாங்கி அணைக்கப்பட்ட நிகழ்வு கண்டனங்களை எழுப்பியுள்ளது.

டில்லியில் நேற்று (27.7.2024) நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேசும் போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது என்றார். இந்த சூழலில் மம்தா பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது ஒலி வாங்கி திடீரென அணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதனை கண்டித்து மம்தா வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட் டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அழைப்பை ஏற்று, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தான், பேசிக்கொண்டிருக்கும்போதே ஒலி வாங்கி அணைக்கப் பட்டதாகவும், தனக்கு பேச வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பிறர் 10-15 நிமிடங்கள் வரை பேசியதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு முதலமைச்சர் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“இதுதான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?.எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிகள்போல் ஒடுக்க நினைக்கக்கூடாது. கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கும் மரியாதை அளிக் கப்பட வேண்டும்.” என்று பதி விட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *