தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப மாநாடு!

1 Min Read

சென்னை, ஆக.16 – சென்னையில் பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக் கான 5ஆவது தொழில்நுட்ப மாநாடு 18.8.2023 அன்று ஒன்றிய அரசு அமைப்புகளின் ஆதரவோடு இறக்குமதிக்கு மாற்றாக உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கம் நோக்கில் நடைபெறுகிறது!

சென்னை தேனாம்பேட்டை அய்யாத் ரீஜென்சி அரங்கில் நடைபெறும் இந்தத் தொழில் நுட்ப மாநாட்டிற்கு, ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் வர்த்தகத் துறை ஆகியவை ஆதரவு அளிக்கின்றன.

இதுகுறித்து ஏ.அய்.பி.எம்.ஏ. அமைப்பின் தலைவர் மயூர் டி.ஷா மற்றும் கவர்னிங் கவுன்சில் தலை வர் அரவிந்த் மேத்தா ஆகியோர்  கூறுகையில்:-

வருடாந்திர உற்பத்தியான ரூ.7 லட்சம் கோடி மூலம் இந்தியா ஒரு பிளாஸ்டிக் விநியோக மய்யமாக மாற முடியும். 50,000 தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 50 லட்சத் துக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை இத்துறை அளிக்கிறது.

அதில் 90 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடங்கும். இம்மாநாடு இறக்குமதிக்கான பதிலீட்டை எளிதாக்குவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை இது வெளிப் படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *