புதுடில்லி, ஜூலை 28- மாநி லங்களவைத் தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜெகதீப் தன்கரின் நடவடிக் கையைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் தாக்கீது அளித்தால் அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவை திமுக குழுத்தலை வர் திருச்சி சிவா எழுப்பினார். அப்போது, மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் தாக்கீது அளித்தால் அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதேநேரம், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் தாக்கீது அளித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் இந்த பாரபட்ச மான நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை யில் முழக்கமிட்டனர்.