புதுடில்லி, ஜூலை 28 புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமனம்; ராஜஸ்தான் ஆளுநராக மராட்டிய சட்டப்பேரவை மேனாள் பேரவைத் தலைவர் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே. பஞ்சாப் மாநில ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவும், (இவர் சண்டிகரையும் சேர்த்து கவனிப்பார்) அசாம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்.