‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று இனி மத்தியப்பிரதேச மக்களும் கூறுவார்களோ! நாளேடுகளில் ஒரு விளம்பரம் மிகவும் வியப்பானது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தங்கள் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றை மத்தியப் பிரதேசம் நடத்தவிருக்கிறது என்ற விளம்பரம்தான் அது.

25 ஆண்டுகளாக பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மாநிலம். இந்தியாவின் வளர்ச்சிக் குறியீட்டில் கடைசியில் கூட இருக்கத் தகுதி இல்லாத மாநிலங்களில் முதலிடம் என்றால், அது மத்தியப் பிரதேசம் தான் என்று நகைப்போடு கூறும் அளவிற்குத்தான் அம்மாநில வளர்ச்சி.
அங்கு என்ன குறை? கனிம வளம், நீர்வளம், நிலவளம், வற்றாமல் ஓடும் ஆறுகள், வனங்கள் என அனைத்தும் அங்கே உண்டு. நமக்கு நீர்வளம் மழை வந்தால் தான்! ஆனால், அங்கே அப்படி அல்ல.

ஆனால், அவர்கள் முத லீட்டாளர்கள் கூட்டம் நடத்த மத்தியப் பிரதேச நகரங்களான போபால், இந்தோர், க்வாலி யர் போன்ற எதுவுமே கிடைக்க வில்லையா?

போபால் விமான நிலையத்தில் பசு மாடுகளும், ஆடுகளும் ஓடுபாதையில் மேயும்; விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும் ஊழியர்கள் அங்கு மேயும் ஆடு, மாடுகளை ஓடி ஓடி விரட்டும் நகைச்சுவை எல்லாம் இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
தமிழ் நாட்டில் கோயமுத்தூரில் இந்தத் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது.

ஏன் அவர்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? பாஜகவின் குஜராத், மும்பை, தலைநகர் டில்லி அல்லது கோடை வாஸ்தலங்களான சிம்லா, குலு மனாலி போன்றவை கிடைக்கவில்லையா? இருக்கிறது; ஆனால், அங்கு இவர்கள் தேடும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் கட்டமைப்பு இருக்காது. ஆகையால்தான், ‘திராவிட மாடல்‘ அரசின் மாநிலத்தை தேடி ஓடி வருகின்றனர். இனி மத்தியப் பிரதேசமும், திராவிடத்தால் வளர்ச்சி பெறும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *