கூடங்குளம் 3, 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியது வளாக இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் தகவல்

Viduthalai
1 Min Read

திருநெல்வேலி,ஆக.16 – திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர நாள் விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலை யம் சார்பில் அணுவிஜய் நகரியத் தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் அவர் தேசியக் கொடி யேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மத்திய தொழில் பாது காப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவிலேயே அதிக பாது காப்பு கொண்டதாகும். முதல் மற்றும் 2ஆவது அணுஉலைகள் மூலம் இதுவரையில் 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற் பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022_-2023ஆம் ஆண்டில் மட்டும் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற் பத்தி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள முதல் அணுஉலை தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது சாதனையாகும்.

கூடங்குளம் அணுஉலை சார் பாக சுற்றுவட்டாரப் பகுதி மேம்பாட்டுக்காக ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.19.74 கோடி கிராம மற்றும் ஊரக மேம்பாட்டு பணிகளுக்கு செலவிடப்பட்டுள் ளது. கிராமங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக ராதாபுரம் தொகுதியில் உள்ள 193 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.3.86 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம், நவ்வலடி, சங்க னாபுரம், வடக்கன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.1.85 கோடியில் மேம்படுத்தப்பட்டுள் ளன.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணுஉலைகளில் உள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உபகரணங் கள் அமைக்கப்பட்டு, பிரதான குளிரூட்டும் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளன. 5 மற்றும் 6ஆவது அணுஉலைகளின் அடித் தள கட்டமைப்புப் பணி நிறைவு பெற்று, மேல்மட்ட அடுக்குக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

-இவ்வாறு அவர் பேசினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *