புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! – கபில்சிபல்

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக.16 – ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞ ருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:  

பாரதிய நியாய சம்ஹிதா மசோதா அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலச் சட்டங்களை நீக்குவதாகக் கூறும் பாஜக அரசு, இந்தப்  புதிய சட்டங்கள் மூலம் நாட்டில் சர்வா திகாரத்தைத் திணிக்க விரும்புகிறது. இந்தச் சட்டங்கள் மூலம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங் களின் நீதிபதிகள்,  அரசுப் பணியாளர்கள், தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து நீதிபதிகள் விழிப் புடன் இருக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். 

இந்த மசோதாக்கள் சட்டமாக நிறைவேறினால், எதிர்காலத்தில் நாடு பெரும் ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும். பிஎன்எஸ் மசோதாவின் பிரிவுகள் 254,  255, 257 உள்ளிட்டவை அரசு அதிகாரிகளைப் பயமுறுத்துவதாக உள்ளன. ஆங்கிலேயர்கள்கூட இத்தகைய முறைகளைக் கையாள வில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *