தமிழ்நாடு ஆளுநர் ரவியின் கவனத்திற்கு…

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மசோதாக்களை கால வரையின்றி நிலுவையில் வைப்பதா?
கேரளா, மேற்குவங்க ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடில்லி, ஜூலை 27- கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங் களில் அம்மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கு உதாரணமாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநருக்கும் பல்வேறு விவகாரங் களில் நீடிக்கும் மோதல் போக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கா ளம், கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள், எந்தவொரு காரணத்தையும் தெரி விக்காமல் அந்தந்த ஆளுநர்கள் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (26.7.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், “மசோதாக்களை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பும் ஆளுநரின் முடி வில் நாங்கள் சவால்களை எதிர் கொள்கிறோம்” என்றார்.

இதேபோல், மேற்கு வங்காளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கு ரைஞர்கள் அபிஷேக் சிங்வி, ஜெய்தீப் குப்தா ஆகியோர், “ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படும்போது, ஆளுநர் மாளிகை குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்புகிறது” என்றனர்.

இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க கோரி, ஒன்றிய உள்துறை அமைச் சகம் மற்றும் இரு மாநில ஆளுநர்க ளுக்கும் தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *