உத்தரப்பிரதேசத்தில் சாமியார்களின் அடாவடித்தனம்
லக்னோ, ஜூலை 27 உத்தரப்பிர தேசத்தில் அடுத்த ஆண்டு நடை பெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்கள் பெயர்களை எழுதி வைக்க மாநில முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமியார்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கன்வர் யாத்திரை எனப்படும் ‘புனித‘ நீர் என கங்கை நீரைக் கொண்டு வரும் நிகழ்ச்சிகளின் போது, உணவகங்களில் உரிமையாளர்கள் பெயரை எழுத வேண்டும் என்ற உத்தரப்பிரதேச அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் சாமியார்கள் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்க ளில்தான் இந்தக் கும்பமேளா நடைபெறுகிறது. ஹரித்வார், காசி உள்ளிட்ட நகரங்களில் இந்தக் கும்பமேளா நடத்தப்படும்.
கும்பமேளா காலங்களில் ஆண்டு முழுவதும் வாழ்வில் இருந்து விலகி நிற்கும் பல்லா யிரக்கணக்கான சாமியார்கள் நிர்வாண அணிவகுப்பு நடத்தி, ‘புனித நீராடுதல்‘ என்று ஒன்று திரள்வர். அப்போது சாமியார்கள் குழுக்களிடையே எந்த குழு முதலில் நீராடுவது என்கிற மோதல்களும் வெடிக்கும். ஆனால், எந்த ஒரு மாநில காவல் துறையினரும் சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்த ரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்தக் கும்பமேளா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய அகாடா பரிஷத் (சாமியார்கள் கூட்டமைப்பு) பொதுச்செயலாளர் சுவாமி ஹரி கிரி, கும்பமேளாவில் பங்கேற்ப வர்களுக்கு உரிய அடையாள அட்டையை மாநில அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க இந்த அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் கும்பமேளா நடை பெறும் இடங்களில் உள்ள உணவகங்களில் கடைகளின் உரிமையாளர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கவேண்டும். கன்வர் யாத்திரையின் போது இப்படி பெயர் எழுத உச்சநீதிமன்றம் தடை விதித்தி ருந்தாலும் கும்பமேளாவில் பெயர் எழுதித்தான் ஆக வேண்டும். இதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உத்தரப்பிரதேசம் அலகா பாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. கும்பமேளா காலங்களில் பல்லா யிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் நீராடும் நிகழ்ச்சியும், அவர்களின் காலில் விழுந்து பக்தர்கள் ஆசி பெறும் மூடத்தன நிகழ்வுகளும் நடைபெறும்.