5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததினால் கூட்டத்திலிருந்து வெளியேறினார் மம்தா!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 27 நிட்டி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததால் கோபத்தோடு வெளியேறினார் மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா. நிட்டி ஆயோக்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

தலைநகர் டில்லியில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிதி தொடர்பான (நிட்டி ஆயோக்) ஆலோசனை கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் வராமல், துணை முதலமைச்சரான பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்திரியை அனுப்பினார். ஆனால், நிட்டி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்பதனால், அவர் மீண்டும் பாட்னாவிற்குத் திரும்பிவிட்டார்.

இதனிடையே ஜார்க்கண்ட் முதலமைச்சர் கலந்துகொள்ள இருப்பதாக அம்மாநில தலைமைச் செயலாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரனும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், நிட்டி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை யில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து மம்தா கலந்துகொண்டார் . ஆனால், அங்கு அவருக்கு 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காத காரணத்தினால், பாதியிலேயே வெளியேறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *