புதுடில்லி, ஜூலை 27 நிட்டி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததால் கோபத்தோடு வெளியேறினார் மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா. நிட்டி ஆயோக்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
தலைநகர் டில்லியில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிதி தொடர்பான (நிட்டி ஆயோக்) ஆலோசனை கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் வராமல், துணை முதலமைச்சரான பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்திரியை அனுப்பினார். ஆனால், நிட்டி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்பதனால், அவர் மீண்டும் பாட்னாவிற்குத் திரும்பிவிட்டார்.
இதனிடையே ஜார்க்கண்ட் முதலமைச்சர் கலந்துகொள்ள இருப்பதாக அம்மாநில தலைமைச் செயலாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரனும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், நிட்டி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை யில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து மம்தா கலந்துகொண்டார் . ஆனால், அங்கு அவருக்கு 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காத காரணத்தினால், பாதியிலேயே வெளியேறினார்.