நிலவில் தண்ணீர்: சீன விஞ்ஞானிகள் தகவல்

1 Min Read

பீஜிங், ஜூலை 26- நிலவில் இருந்து, 2020இல் எடுத்து வரப்பட்ட மணல் மாதிரிகளில், தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சீன விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனா, நிலவை ஆய்வு செய்வதற்காக, 2020இல் சாங்க் – இ 5 என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அது நிலவின் மேற்பகுதியில் இருந்து மணல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்துள்ளது.

சீன அறிவியல் அகாடமி உள்ளிட்ட அமைப்புகளின் விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்துள்ளனர். விண்வெளி ஆய்வு தொடர்பான இதழில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து, சீன விண்கலம் எடுத்து வந்த மணலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனிமங்களின் மாதிரிகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிந்திராத கனிமங்களும் அதில் அடங்கும்.
மேலும், ஒரு கனி மத்தில், நிலவில் தண்ணீர் இருந்ததற்கான மூலக்கூறுகள் கிடைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *