டில்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டடங்கள் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 Min Read

சென்னை, ஜூலை 26- அரசாங்க பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டில்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் அவசியமாக இருக்கிறது.

டில்லியில் ஏற்கெனவே இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் இருந்தாலும், அவை 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்களாக இருக்கின்றன. எனவே நவீன வசதிகளுடன் அதே இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என கடந்த ஆண்டு முதல் அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது டில் லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் கட்டடப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரை முருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *