டில்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டடங்கள் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 Min Read

சென்னை, ஜூலை 26- அரசாங்க பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டில்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் அவசியமாக இருக்கிறது.

டில்லியில் ஏற்கெனவே இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் இருந்தாலும், அவை 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்களாக இருக்கின்றன. எனவே நவீன வசதிகளுடன் அதே இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என கடந்த ஆண்டு முதல் அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது டில் லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் கட்டடப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரை முருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *