வயதான இணையரை சரமாரியாகத் தாக்கும் பா.ஜ.க. தலைவரின் மகன்: அதிர்ச்சி காட்சிப் பதிவு

1 Min Read

லக்னோ, ஜூலை 26 உத்தரப்பிர தேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த இணையரைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி காட்சிப் பதிவில், முதியவரை மிரட்டும் அபினவ், அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.

சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது. முதிய இணையருக்கும், அபினவுக்கும் என்ன பிரச்சினை என்ற தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வின் காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களைக் குவித்து வருகிறது. ஆனால்,ஆதாரம் இருந்தும் இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்ப தால் காவல்துறையினர் இந்த விவ காரத்தில் நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டுவதாக நெட்டி ஸன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *